Thursday, November 19, 2015

அம்மா

பஞ்சத்துல பிழச்சபோதும் 
பட்டினியப் பாத்ததில்ல
பசிய நானும் கண்டதில்ல
நீ பத்துமாசம் சுமந்ததில

நெஞ்சம் எல்லாம் உன் நினவே
தஞ்சம் கொள்ள யாரும் இல்ல
பிஞ்சு மனம் ஏங்குதம்மா உன்
பஞ்சு மனம் காணாமலே!

ஐஞ்சு வயசினால நான்
அகராதி படிச்சதென்றால்
அம்மா உன் மடியென்று-இவ்
அகிலமும் அறியுமோம்மா?

தாயே நின் பெருமை -என்
சொல்லில் அடங்காதடி,
காய்ச்சல் சுட்ட பொழுதினிலே,
கண்ணீர் சொட்ட நிதம் காத்தாய்.
சான்றோனாய் எனை மாற்ற,
சாதாரணமாய் உனை மாற்றி
சாதிக்க அனுப்பி வைத்தாய்

நீ தரணியை ஆளும் நாள்..
நமக்கினித் தூரமில்ல-நீ
செஞ்ச தர்மமெல்லாம் உன்ன
வாழ வைக்கும் காலம் வரும்
.
ஆராரோ பாட்டு பாடி
அழகாய் வாழ்த்தும் பாடி
அம்மா உன் பிறந்தநாளில்
சிறு கவி நானும் தாரேன்,!
தயவாய் ஏற்று தாயே
தரணி போற்ற வாழ்ந்திடம்மா,!

ஆகாசம் வரை நான் உயர்ந்தாலும்
உன் அன்புக்கென்றும் நான்
அடிமையம்மா,,,,!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

0 comments:

Post a Comment