Monday, November 23, 2015

விதி விடும் ஆசை,

பால் மனம் மாறும் 
வயதிலும் பாசம் காட்ட 
அன்னை வேண்டும்..!

பள்ளி செல்ல
மறுக்கும் வயதில்
பார்வையிலே பயம்
காட்டும் என் பாசமிகு
தந்தை வேண்டும்

பாவையர் கண்ணில் சிக்க
பரிந்து போய் காதல் சொல்ல
பணிவான தோழி வேண்டும்

பாதை தடுமாறும் கணம்
பத்திரமாய் என்னை தேற்றும்
பண்பான தோழன் வேண்டும்

தஞ்சம் எனக்கொள்ள
நெஞ்சம் ஒன்று இன்றி
நான் தவிக்கும் கதை கேட்க
கன்னி ஒருத்தி என்
காதலியாக வேண்டும்

பாலும் பழமும்
உண்ணும் பொழுது
உயிராய் என்னை ஏந்தி
புது உயிர்க்கு உலகை
காட்டும் கனிவான
மனைவி வேண்டும்

இச்ஜெகம் என்னை
இகழ்ந்த போது கூட
துணிந்து நின்று நான்
துயர்தனில் வாழும்
வெட்கம் கெட்ட என்
வேதனை சொல்ல
வேண்டும்...!
வேண்டும்......!
என்னவள் சாயல்
பெண் குழந்தையும்..........!
என் வடிவில் ஓர்,
ஆண் குழந்தையும்.....................!.

0 comments:

Post a Comment