Wednesday, October 15, 2014

உன் இதழ் சுவையில் என் உயிர்.!



இனியவளே ..நீ ..!
சொற்சுவையோ..

பொற்சுவையோ ...
விளங்கவில்லையடி எனக்கு ...!


இயல் என்றேன் ..

இசை என்றேன் ..
இவையிரண்டும் 

உன் விழிகள்என்றேன் ..
நடத்திக்காட்டினாய் ...

ஒரு காதல் நாடகம் ..!

உன் இதழ் சுவை கண்டு ...
முக்கனியும் துவர்ப்பென்றேன் ..
உன்கொடிஇடை நடனம்கண்டு ..
முத்தமிழும் உன்னிடம் 

சிரிக்க கண்டேன் ..!
விண் கண்டேன்..

மண் கண்டேன் ..
பொன் கண்டேன்...

பண் கண்டேன் ...-பின் பெண் 
உனைக்கண்டேன் பேரழகில-நான் 
கண்டதை எல்லாம் கனா என்றேன் ..!

மலர் உனைக்கொய்ய..

காதல் வாள் எடுத்தேன் ..
கொய்த என் இதயத்தை ..
உன் விழிகளுக்குள் வீசிவிட்டு ...
இதோ உன் இதயசிறையில் இடம்கேட்டு ..
இரவுப்பகலாய் தவம் கிடக்கின்றேன் ..!
வரம் கேட்கிறேன் கண்னசைவிலாவது..
என்னை சிறைப்பிடித்து போயேன் ..!
உன் இதழ் சுவையில் என் உயிர் ..
உனைதேடி உயிரோடு பிரிந்ததடி ..!

0 comments:

Post a Comment