Monday, October 13, 2014

பொடிப்பையன் என் காதல்...!!

பள்ளிக்கூட புத்தகமும்
பல்லைக் காட்டி சிரித்தது,
எல்லாப் பக்கத்திலும்
உன்னைத் தேடிய போது...!!

அழிப்பான்கள் எல்லாம்
அழுகத் தொடங்கியது,
உன் பெயரை தவறாக கிறுக்கி
மீண்டும் அழித்தபோது...!!

பத்துக் காசுகள் எல்லாம்
பயத்தில் நடுங்கியது,
உனக்கு மிட்டாய் வாங்க
கடையில் விற்கப்படுவோம் என்று...!!

பாதரசம் என்ன
பாவம் செய்ததோ..??
எட்டாத கண்ணாடியில் உனக்காக
எகிறித் தலை சீவும் போது...!!!

அவளுக்கு கவிதை எழுதி
என் காதல் சொல்லலாம்..!!
ஆனால், பாடம் எழுதித் தரும்
அம்மாவிடம் கவிதை எழுதச் சொல்லி
எப்படி கேட்பது..??

0 comments:

Post a Comment