Monday, October 13, 2014

வாக்கு தா அம்மா! வல்லமைகாரியே!

பக்தி முத்தியது பராசக்தி
உன்னை கான!
பாவம்தான் பாலகன் எண்று
பத்தினியே நீயும்!
பறந்தோடி வாராயோ?
ஆறு தப்பு நுறு பிழை
அறியாமல் செய்ததாவும்
அம்பிகையே பொறுத்திடணும்
அடியேனுக்கருளிடனும்.
மூன்று நாழிகைதானடி
முத்தழகே உன்னை பாட
வால் கொண்டு வேல் கொண்டு
வேட்டையாட நீயும் வந்து
வேதனைகள் போக்கிடம்மா
வேப்பிலை காரி உனக்கு,
வேதங்கள் அருளிடுவேன்!
வேறு புகழும் பாடிடுவேன்!
அடியேன் வாக்கிட்டேன்
அம்பிகையின் புகழ் பாட
அம்பிகையே வாக்கிடுவாயோ
அகில மக்கள் துயர் நீக்க?

0 comments:

Post a Comment