Monday, October 13, 2014

தமிழா உறங்கியது போதுமடா!

வங்கக் கடல் மீது.
தங்க தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்கள்
சங்கறுத்து கொள்கிறது தமிழா !
இன்னுமா நீ உறங்குகிறாய்!


வலை வீசி மீன் பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலை மீது குண்டு வீச்சும்
சடுதியிலே துப்பாக்கி சூடும்
சரமாரியாய் நடக்கிறது தமிழா!
இன்னுமா நீ உறங்குகிறாய்!


நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள் தோறும் அகதிகளாய்!
நாடிழந்து வருகின்றதே தமிழா!
இன்னுமா நீஉறங்குகிறாய்!


ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து நொறுக்கி சுட்டுக் கொன்று
அவமானபடுதுகின்றனரே தமிழா!
இன்னுமா நீ உறங்குகிறாய்!
 

0 comments:

Post a Comment