Wednesday, October 29, 2014

கனவுகள் தொலைந்ததெங்கே...?

கறிவேப்பிலை தொட்டு
கத்தரிக்காய் கருவாடு 

 நச்சிரகம் முதல்
வெந்தயம் பெருஞ்சீரகம் வரை
தமிழ் கடைகளில்
எல்லாமே கிடைக்குதம்மா..!

தொலை பேசியில் அம்மாவை 

சந்தோஷ படுத்திய
சமநேரத்தில் இதயம் கனத்து 

கண்கள் பணித்தது.!

உள்ளே அம்மாவுக்கு
சொல்லாமல் ஒரு 

கண்ணீர் வாசகம்.
பக்குவமாய் பதமாய் சமைக்கவும்
பாசத்தோடு பரிமாறவும்
நீங்கள் தான் அருகில் 

இல்லையே!!!

எந்த கடையில் 

கிடைக்குமோ
தாயின் அக்கறையும் 

பராமரிப்பும்..!?

0 comments:

Post a Comment