Wednesday, October 29, 2014

திருமண அழைப்பிதழ்.!



நெருடலில் நான்

நெருங்குகிறாய் நீ!
நிற்குலைந்தேன்
நிதானத்துடன்...
கைவைத்ததில்
களைந்தது
உடுப்பு மட்டுமல்ல..
உள்ளமும்தான்
உள்ளம் கொடுப்பாய்- என்று
உன்னிடம் நின்றேன்
உதடுகடிக்கிறாய்
விருப்பமாய் சொல்லியிருப்பேன்
விரல்தொட்டு நீ- நிற்க
விட்டு விடாதே!-என்று
ஆசை அவ்வளவுதான் என்றாள்
அந்நியோன்யம் குறைந்து விடும்
ஆதலால்
முற்றுமில்லாமல்...
முடிவுமில்லாமல்...
உருகி
மருகி
நிற்கிறேன்
மணவாளனாக-மணவாளியாக
அவன் ! அவள் !

0 comments:

Post a Comment