Monday, October 13, 2014

காதல் சொல்லடி!

பேய் போல் அலைந்து
பின்முன் திரிந்து நான்
நாய் போலாகிறேன் பெண்ணே!
உன்மேல் பித்தாகிப்போகிறேன் கண்ணே!

தாய்சொல் மறந்து  பின்
தரங்கெட்டுப் போகவே
காய்கிறேன் ஊண்கொண்டு வீணே
உறக்கமும் மதியும் கெட்டே!

கண்ணே! உன்னுடன்
காதல் கொண்டு நான்
மண்ணாய் ஆகிறேன் பெண்ணே!  நீ
இல்லை கூறிட
முன்னே சாதலால்
சேதம் ஆகுமென் நெஞ்சே!

உன்னுள் கலந்து  நான்
ஊனுள் உறைந்திட
என்னுள் காய்கிறேன் வெந்து
நானும்….
மண்ணுள் பொகுமுன்
உன் காதலை
சொல்லிப் போவடி பெண்ணே!

0 comments:

Post a Comment