Monday, October 13, 2014

அலைமகளே வருக!

திருமாமகள் செல்வி நீயோ?
திருமால் உள்ளத்தில் உறைபவளும் நீயோ?
அருளே உருவாய் அமர்ந்தவளும் நீயோ?
மரு நிறை மலரில் வாழ்பவலும் நீயோ?
குருவெனவே ஞானம் கொடுப்பவளும் நீயோ?
இருள் ஒழித்து இன்பம் அருள் பவளும் நீயோ?
அருள் பொழிந்து எம்மை ஆள்பவளும் நீயோ?
அயோத்திக்கு அரசியானவலும் நீயோ?
முரசொலி அந்த நகர்க்கு முதல்வியும் நீயோ?
உருக்கு மணியாய் உதிதவலும் நீயோ?
செருக்கு ஒழித்து ஒளிர்பவலும் நீயோ?
செந்தமிழ் நாட்டின் செல்வமும் நீயோ?
மான் வடிவெடுத்த ஹரிணி'' யும் நீயோ?
கார்த்திகை பெண்ணவள் நீயோ?
கார்முகில் கண்ணழகும் நீயோ?
பாற்கடலில் அங்கமானவள் நீயோ?
சிந்தனையில் சித்தரித்தவள் நீயோ?
சித்திரமானவளும் நீயோ?-என்
சித்தம் எல்லாம் உன் நினைவில்
சித்தனும் ஆகி விட்டேன்
வரிகளும் எட்டவில்லை
பட்டதை பார்த்திடாமல் தொட்டதை
போட்டு விட்டேன்
சிறுவன் தானும் என்று
சிறு பிழைகள் பொறுத்திடணும்
சின்ன மகாலச்சுமியே!

0 comments:

Post a Comment