Monday, October 13, 2014

கனவிலும் கானா கன்னி நீ!

கார் மேக கூந்தல்
கயல் விழி பார்வை
கண் கொட்டும் அழகு
மன்னிக்கவும்
இதற்கு மேல பொய்
சொல்ல வரல..


உண்மையில?
எப்போதாவது அழகா
தெரியும் பெண் மயிலே,,,.
என்னவளாய் ஆன பின்
என்னவோ!!!
முப்பொழுதும் அழகானாய்.
முன்ஜென்ம உறவானாய்....


வங்கி கடனுக்கு
அலை பேசியில்
வலை விரித்து
வளித்து எடுத்தது
என்னவோ
என் மொத்த அன்பையும்.


முகம் அறியாது ...
முகவரிகள் தேடாது...
முத்தங்கள் கூட பரிமாறா...
முன்னுரை இட்டது-நம் நாகரிக
அன்பின் காதல்.


நான் கிறுக்கிய
வார்த்தைகளை
கவிதை என்று
கருத்தாய் சேமித்தாய்.
கரு ஓன்று உண்டானில்
அது நீ தரும் வரமாகும்
என போதித்தாய்.


கன்னி உன்னை
காண்பதற்கு கனவும்
தவம் கிடக்குதடி,
தவத்திற்கு தான் வரமாய்
வந்து செல்லேன்
என் கனவில்.!
 
 
 
 

0 comments:

Post a Comment