Wednesday, October 29, 2014

அம்மா..!

அன்னை என்றொரு ஆலயம்
அங்கே அன்பு மட்டுமே ஜீவனம் .
காணிக்கை கேட்காத கடவுள் அவள்
தரணியில் காணக்கிடைக்கும் 

அவளின் அருள் .

பத்து திங்கள் கருவிருந்தேன் -அவள் 

பளிங்கு முகத்தினை கண்டிடவே !
என்ன தவம் செய்திருந்தேன்
தாயாய் இவளை கொண்டிடவே ! 


பாசம் புரளும் வங்கி அவள்
வட்டி வசமின்றி முழுதும் தந்திடுவாள் .
பத்து பிள்ளை பெற்றாலும் முத்தம்
பாங்காய் பகிர்ந்து தந்திடுவாள் .
எத்தனை பிறவி கொண்டாலும்
உன் மகனாய் வாழும் 

வரம்வேண்டும் அம்மா!

0 comments:

Post a Comment