Wednesday, October 29, 2014

மரணத்தின் வாசலில்.!



பல்லாயிரம் ஆசைகளைச் சுமந்து

பவனிவந்தேன் பாரில்நான்!
எல்லோரும் செயும் நல்லவையும்
தீயவையும் செய்திருப்பேன்! என்றாலும்
சுவனத்தில் ஈடேறவே
உலகில் பலசெய்தேன்! இன்று
எனது உள்ளத்து வேதனைகள் பற்றி
கடலளவு நான் கத்திக்கத்தி
குரல்ஓயுமட்டும் சொன்னாலும்
யாருக்கும் கேட்கப்போவதில்லை!

ஏ! இறைவா!
உத்தம்மான படைப்பாக நீ
எங்களைப் படைத்தாய்
நாங்கள் எங்களை மறந்து
எத்தனை தவறுகள் இழைத்தோம்!
உன்னிடம் அழுதுகேட்கிறேன்....
எல்லோரும் ஒன்றாக வாழ்ந்திட நீ-எண்ணிடு!
சாதித்துவ அரக்கர்களை அழித்திடு!-அப்போது
பிணமாய் உள்ள எம்காதுகளில்-அந்த
முணுமுணுப்புக்கள் எழாது!
உண்மை வழியை
உத்தம வழியை காண்பித்திடு!
எல்லோரும் இன்புற்றிருக்க....
எல்லோரும் இன்பமாய் உன்னருகில்வந்திட.....!

0 comments:

Post a Comment