கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகளை ஓரவிழிப்பார்வைகளாக்கி
என் மேல் செலுத்துவாய்,
பார்த்துக்கொண்டிருக்க நான் என்ன
சோதனைதளமா!!!
பெண்ணே,
நீ பறித்துச்சூட மட்டுமே
மலரச்செய்கிறேன் எனக்குள்
காதலை...உன் பார்வை துளைத்தெடுத்த
என் இதயத்தில் வாசித்துவிடு
காதல் இசை...
உன் நினைவு உதடுகள்
வாரிக்கும் புல்லாங்குழலாகவாவது
அது இருந்துவிட்டுப்போகட்டும்..
0 comments:
Post a Comment