ஒன்றாக இருக்கின்ற தாயானவள்
இரண்டாக இணைகின்ற உறவானவள்
மூன்றாக சுழல்கின்ற நிகழ்வானவள்
நாலாக நவில்கின்ற மறையானவள்
ஐந்தாக அருள்கின்ற வடிவானவள்
ஆறாக சுவைக்கின்ற ருசியானவள்
ஏழாக ரசிக்கின்ற நிறமானவள்
எட்டாக படைக்கின்ற சித்தானவள்
ஒன்பதாய் உண்டாக்கும் சுமையானவள்
பத்தாகி வெற்றிக்கு பிறப்பானவள்
இரவிலே ஒளிகாட்டும் விளக்கானவள்
எல்லா மிடம்நிறைந்தப் பெண்தானிவள்.
என் உள்ளம் வசிக்கும் சக்தி தான் அவள்,
எட்டு திக்கும் பட்டு தெறிக்கும்
பராசக்தி எனும் அவள் நாமம்!
0 comments:
Post a Comment