Wednesday, October 15, 2014

புதிரான என் வாழ்வு.!


புரியவில்லை அன்பே...!
நீ நடத்தும் நாடகங்கள்
ஒவ்வொன்றும்...!
மறந்து விட்டேன் உன்னை...!
என்று தான் சொல்ல
நினைக்கிறேன்?
ஆனால் சொல்லி முடிக்கும்
மறுகணம்
நினைவில் நீ...!
பிரிந்து விட்ட பின்னும் உன் பெயர்
படித்தால் உள்ளம்
புல்லரிப்பது என்னவோ உண்மை தான்
அன்பே...!
இந்த முறை உன்
பிரிவு என்னை ஸ்தம்பிக்க
செய்யவில்லை...
காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்...!
போகும் போக்கில்
புரியவைத்து விட்டாய்
வாழ்வு பொய் என்று...

0 comments:

Post a Comment