Monday, October 13, 2014

விஜயதசமி!

ஓன்பது இராத்திரிகள் ஒளிரும் சுபராத்திரிகள்
மகாசக்திகளின் தத்துவம் நிறை இராத்திரிகள்.
முக்தி தரும் தேவியரிடம் ஆக்க நிலை வேண்டி
ஒருமித்து நாம் வணங்கும் நவராத்திரிகள்

வீரத்தின் அதிபதி துர்க்கையை
வீரியம் வேண்டி வணங்குகிறார்.
செல்வத்தின் அதிபதி இலக்குமியை
செல்வம் வேண்டிச் சேவிக்கிறார்.

கல்வியின் அதிபதி சரஸ்வதியைக்
கல்வியை வேண்டி வணங்குகிறார்.
கருமமாய் வணங்கும் புனித இராத்திரிகள்.
விசய தசமியுடன் விடைபெறுகின்றன.


வித்துவங்களின் இணைப்பில் ஆரம்பத்தில்
தத்துவமான மனவியல் வழியாரம்பம்
"விஜயதசமி இன்று" தான் வித்தியாரம்பம்
வியாபித்து எங்கும் வெற்றிவாகை சூடும்.

0 comments:

Post a Comment