Wednesday, October 29, 2014

கனவு!

மனதில் ஆயிரம் கனவுகள்..!!
வறுமை ஒழிந்து
செல்வனாய் வாழக் கனவு..!!
அம்மாவிற்கு ஆயிரம் புடவை
புதிதாய் அளிக்க கனவு..!!
ஈரடுக்கு மாளிகையிலே
தந்தை அமர்ந்து உணவுண்ன
காணக்கனவு..!!
தங்கையின் கையில்
வையிரம் மின்ன நான் காண கனவு..!!
கவிஞனாய் நானும்
திரைப் பாடலில்
மினுமினுக்க கனவு..!!
கனவுகள் நினைவானதாக
நித்தமும் கனவு..!!

0 comments:

Post a Comment