Monday, October 13, 2014

அனாதையாய் நான் ஒருவன்.......!

அறியாத வயதில் வந்த போது
அழுகை வந்தது
அறிந்த வயதில் கேட்டதும்
பயம் வந்தது
ஆசை கொண்ட போது
எதிர்ப்பு வந்தது
அடி பணிந்து மறந்த போது
அழுகை வந்தது
அன்பிலான் எனை வெறுத்த
போது ஏக்கம் வந்தது
ஆளுக்கொரு கரையில் வாடும்
போது விரக்தி தான் வந்தது
அன்பினை புரிந்த யாரும் சேர்த்து
வைப்பர் என்ற ஆவலுடன்
அனாதையாய் நான் ஒருவன்.......!

0 comments:

Post a Comment