Wednesday, December 24, 2014

அழைத்து விடு அழகியே!

தொலைந்த என் இதயம்
தொலைவில் செல்லும்
உன்னை தொடர்வதை கண்டேன்…!


மறந்த உன் முகத்தை
மலர்ந்த மலர்களில் எல்லாம்
மனத்துடன் கண்டேன்…!


மந்திரித்த சேவல்
போல் மந்திரமாய்-உன்
பெயரை மங்காமல் கூவுகிறேன்…!


சில்லறை சிரிப்படி உனக்கு;-ஆஹா
சிந்தனை சிதருதடி எனக்கு…!!
சித்திரையின் நித்திரையில்;
முத்திரையையாய் உன் கனவு…!!


மார்கழி குளிரும் மதி மயக்குதடி
உன் மான் விழிகள் காணமல்
என் உள்ளம் தவிக்குதடி!
கருங்குயிலே உனது
கானகக்குரல் கேளாமல் -என்
காதுகளும் கட்டறுந்து போனதடி!


தூங்க மறுக்குதடி என் விழிகள்..!-ஐயோ
கேட்க விரும்புதடி உன் மொழிகள்…!
அழைத்து விடு அழகியே!-மீண்டும்
உயிர்பித்து விடு பழகியே!

0 comments:

Post a Comment