Monday, February 16, 2015

அதிசயமே அவளங்கம்!

செவ்விதழ் பார்த்தவுடன்
செந்தமிழும் முட்டுதடி
உன் முகவரிக்கோர்-கவி

வரி தயங்காமல் எழுதென்று!


சகாராவை சார்பாக வளைத்து
வடிவமைத்த கன்னங்களடி-அங்கே 

ஈழமும் உள்ளதோடி
உன்னிரு விழிகளாக!
?

சிவனொளி பாதமும் உன்
சீர் கொண்ட நெற்றி மீது
புருவமாக படர்ந்து உள்ளதே!
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
அனைத்தும் காண்பதற்கு
அந்நியர்கள் செல்கின்றனரே!
அயல் நாட்டு தேசங்களுக்கு!

அதிஷ்டகாரன் நானும்
அயல் தேசம் செல்லாமலே
கண்டு விட்டேன் அழகியிடம்!
அதியங்கள் அத்தனையும்!


அன்பாலே அடிமையாக்கி
அறிவளே அழகனாக்கி
அதிசயத்தால் கிறுக்கனாக்கி
அமைதியாய் செல்கின்றாயே,
அயோத்தி நாட்டு அரசியைபோல்


ஆணையிது அறிந்துகொள்
அதிசயமடி உனதங்கம்-அவை
அத்தனையும் எனக்கே சொந்தம்

0 comments:

Post a Comment