Tuesday, February 3, 2015

ஊனமும் உள்ளமும்!

வால் அறுந்த
பல்லிக்குத்தான்
வலிமை அதிகம் தோழா!

கிளைகள் உடைந்தாலும்
மரங்கள் மரணிப்பதில்லை
நேரம்வரும் போது-அவை
உணர்த்தும் ஊனம்
இருப்பினும் உயிர்வாழும்
அவசியத்தை...!

உறுதிகொள், நாம் சாய்ந்து
நடந்தாலும்!-நம்
சாதனைகளால்-என்றும்
நிமிர்ந்தே நிற்போம் என்று!

பிறப்பில் வந்தது ஏதுமில்லையே!
இறப்பில் வருவது ஏதுமில்லையே!
நிகழ்வுகள் மட்டுமே நிதர்சனமே!
அகன்று விரிந்த ஆல் போல்-உன்
சிந்தைகளனைத்தும் சிறக்கடும் தோழா,!

0 comments:

Post a Comment