Wednesday, April 15, 2015

உயிரில் உரசிய தீ

வெள்ளந்தி சிரிப்பினிலே
வேதம் கற்பித்தவளே.!
தீட்டு நெருங்காமலும்
திகழொளி சுருங்காமலும்
திங்கலேயுன் முகம் தேடி
தினம் தோறும் அலையுறேன்டி


ஏற்ற சோகங்களும்
ஏற்காத கோபங்களும்
தேற்றாத நம் உறவில்
பெருமாள் உண்டியலில்
பெற்று கொண்ட சன்மாமனாய்
கொட்டிய வார்த்தைகள் இங்கே
சிந்திய வேர்வை போலே
கோர்வையாய் கிடக்குதடி


மெளனத்தின் விலைவாசி
மயானத்தில் இல்லையடி
மந்திரித்த சேவல்களும்
பரபரப்பில் பதுங்குதடி


படிக்கும் கவிதையெல்லாம்
பனைமர கள்ளு போலே- நம்
பழைய நினைவுகளை
பளிச்சென்று தீண்டுதடி


கோபம் வந்ததென்று-வீண்
பாவம் செய்யாதே பெண்ணே
இக்கோப அலைகள் என்றும்
கோதையர்க்கு ஆகாதடி பெண்ணே


விசுவாச காதலுக்கு -எங்கும்
விளம்பரம் இல்லையடி
விலையற்ற என் அன்புக்கு
விதியே விடை சொல்லும்.

0 comments:

Post a Comment