Thursday, April 2, 2015

இம்சை

தினம் காலை விழிக்கையில்
காதோரம் ஒரு முத்தம்!
கணினி கைகொண்டு 'கார்'
எடுக்கச் செல்லுகையில்
கன்னத்தில் மறு முத்தம்!

கடமை முடிந்து களைப்படைந்து
வீடுவர வாவா உனக்காகத்தான்
காத்திருக்கிறேன் என்று
கண்களால் கனிமுத்தம்!
காதல் வயப்பட்டு காரிகையின்
கண்பார்க்க கார்மேகம்
பொழிவது போல் கட்டி முத்தம்
கணக்கின்றி!

வெறும் கனவுதான்...!-ஆனாலும்
இதமாக இருக்கிறது
எண்ணிப்பார்க்க!
என்னவளே எங்கே நீ,!??

0 comments:

Post a Comment