Sunday, March 29, 2015

மோதலா காதலே!

காத்திருந்த காலமெல்லாம்
விழி பூத்திருந்ததடி
உன்னையெண்ணி,,!
நீலவானம் நிறம் மாறியது
நீ இல்லை என்பதனால்
காணவில்லை உன்னையென்று
கருமேகமும் கலைந்தது சென்றது,


வீசும் தென்றலும்,
கொட்டும் மழையும்,
சுட்டிடும் வெய்யிலும்
சாட்சி வைத்து
காதல் செய்தோமே,
கதிரவனை கண்ட
கருமுகில் போலே
கானலாய் நீயும்
மறைந்திடவே?
சாதியார் செய்ததடி-நம்
சரித்திர காதலுக்கு,


இவ் வாழ்வும் இல் வாழ்வும்
இனிதாய் இருக்குமென்று
இரவுபகல் கனா கண்டேன்
இரண்டும் இல்லையடா
இனியுன் வாழ்விலென்று
இனியவளே செல்வதேனோ?
இளையவளே சென்றதேனோ?

0 comments:

Post a Comment