Sunday, March 22, 2015

நடுவோம் நல்ல மரம்

வீட்டுக்கொரு வீரன் சென்றான்
விடுதலை வென்று வர,-அவன்
வீரச்சாவில் விட்டுசென்றான்
அவனுருவில் ஆலமரம்,


உறவுகோர் உருவகமாய்-
நாளை நம் நினைவு கூற
நாமும் நடுவோம் நல்ல மரம்,


ஏழைக்கெல்லாம் செடி கொடுத்து
எரி குளம் அருகில் நட்டு
நாட்டு வலம் காத்திடவும்
நாளைய தலைமுறை சிலிர்த்திடவும்
நாமும் ஒரு மரம் நடுவோம்


ஆடு மாடு உணவுக்கே
அழகாய் ஒரு மரம் நடுவோம்
அன்பு கொண்ட உள்ளமெல்லாம்
ஆடி பாடி மகிழ்ந்திடவே
ஆளுக்கொரு மரம் நடுவோம்


வறண்டு போகும் வையகத்தின்
வளர்ச்சிக்கு மரம் நடுவோம்
இல்லம் தேடி வந்தோரெல்லாம்
இளைப்பாறி இன்புறவே
இன்றே ஓர் மரம் நடுவோம்


சாலையோர மரம் சமதூரம் நட்டு
பிச்சைக்கு தட்டேந்தி பிழைப்பு
நடத்துவோர்கெல்லாம்-பச்சை
மர நிழலின் பசுமை உணரசெய்ய
பார்த்து பார்த்து மரம் நடுவோம்


கள்ளக்காதல் நல்ல காதல்
காமக்காதல் கண்ணியகாதல்
கொண்டோரெல்லாம் கொண்டாடவே
கோடைநிழல் கொட்டித்தரவே
கோடி மரம் நாம் நடுவோம்,


சூரியகுதிரைகள் எங்கள் சூழலில்
நுழையா வண்ணம்-நம் சுழலும்
தலைமுறை சுற்றி நின்று நினவு கூற
சுருக்காய் செயல்படுவோம்

0 comments:

Post a Comment