Wednesday, March 11, 2015

என்னவளே ஏற்றிடம்மா.

ஓரப் பார்வையால் என்னை
ஒளிப்பதிவு செய்தவளே,
ஐநா பாதுகாப்புச் சபையும்
ஆணையது பிறப்பிக்கும்
நின் பார்வையிலே உண்டு
பயங்கற வாதம் என்று,


நிலையற்ற வாழ்வில்
நிஜமாக தோன்றியவளே,
நீ தேடிய சொர்க்கம்
நான்தான் என்றவளே,
தோழமையும், தாய்மையும்
தாரை வார்த்தவளே,


அன்பையும், காதலையும்
பருக கொடுத்தவளே,

பெண்மை இதுதான் என்று
அறிய வைத்தவளே,-என்
ஆண்மையின் ஆணவம்
உணர வைத்தவளே,


உயிரை பிய்த்தெடுக்கும்
வலியும் இதுதான் என்று
உணர வைத்து-நீயும்
உயிரையும் பறிக்கலாமோ?


உன் சந்திர வதனத்தையும்
சங்கு கழுத்தினையும்
தொடுகின்ற ஆபரணத்தை
ஏக்கமாய் பார்த்தே -உன்
இடைதழுவும் நூலாக
இரவு பகல் தவமிருந்தேன்


விருப்பமெல்லாம் உன் மேலே
விரிமலரே என்னை நீயும்
துரும்பென்று எண்ணாமல்
தூயவனை ஏற்றிடுவாய்.


புண்னான என் நெஞ்சிற்கே
புதுமருந்தாய் வந்தவளே!
தூயவளே என்னையுமுன்
துணையாக ஏற்றிடம்மா!

0 comments:

Post a Comment