Friday, March 20, 2015

வய(து)லும்

கட்டு சோறு
கட்டி கொண்டு
முற்றிய கதிர்களை

முறித்து போட்டு

வாய்கால் வரம்பு வழி
வந்த பட்டாம் பூச்சி
விட்டு விரட்டி சேற்றில்
விழுந்து ஆற்றில்
குளிக்க சென்றதும்,,,,,,!


பட்ட வெயில்
தொட்டு செல்லும்
வயல்க்காற்றின்
வரப்பில் - மெல்ல
நடை போடும் நினைவும்
கனவில் காண்கையில்
மேனி சிலிர்க்குதே,!


வாய்கால் வழியே
வளிந்தோடும்
ஆண்டான் குளம்
அருஞ்சுவை நீரும்
அடுத்த பிறப்பொன்று
இருந்தால் அதிலும்
அங்கே நீராட சொல்லிய காலம்


பச்சை ஓலை பனைமரங்கள்
நுங்கு,பழம்,கிழங்குகளும்
தினம் தந்து கள்ளும்
சுவைத்திடவே சுற்றி
நின்று ரசித்தோமே


உழுத வயல்
உஷ்ண மணமும்
இழையவள்
நாற்றின் மணமும்
முற்றிய கதிரின்
வெட்டிய மணமும்
தூற்றிய நெல்லின்
தூசு மணமும் -சூடு
மிதிக்கும் இயந்திரமாய்-இன்னும்
சுற்றிக்கொண்டு இருக்குதே
இதயத்தினுள்ளே,,!


அறியாத வயதில்
அனுபவித்த மகிழ்ச்சியை
தொலைத்து விட்ட..
அறிவின் துக்கங்கள் என்னுளே..!


வயல் வரப்பில்
வாடினாலும்,வளமான
வாழ்க்கையில்லை
விளைச்சளுக்கேற்ற
விலையில்லை,
விலையேற்றம் விழவில்லை,


கால்வயிறு சோறுண்டு,
காணி நிலமில்லை,

கண்ணீரில் கரைகின்றான்
நிகழ்கால விவசாயி,
கவலை மறந்து குதிகின்றான்
எதிர்கால விவசாயி

0 comments:

Post a Comment