இரக்கமற்ற மனிதருள் -என்னால்
இடத்திற்க்கேற்றால் போலே
இயங்க முடியவில்லையேன்?
இதயத்தில் வலியும் -என்
இமைகளில் துளியும்
இடைவெளி இன்றி சிந்தினேன்
இருந்தும் முடியவில்லை.
இரும்பு இல்லை இதயம் என்று
இறக்கமற்ற இவளுக்கு,
இறைவா ஏன் புரியவில்லை?
உன் படைப்பில் பிழையா?
என் பார்வையில் பிழையா?
படைத்த உன்னை குற்றம் சொல்லி
பலியை உன் மேல போட -நான்
படித்த பண்டிதன் இல்லை
உறவாய் அவள் இருந்து
உள்ளத்தை தான் பறித்து
உணர்வை சிதைத்து விட்டு
உண்மையை மறந்துபோக-என்
உயிரும் ஊசலாடுதின்று
தலையிடி காய்ச்சலும்
தாறுமாறாய் தாவியது,
தலை சாய்த்து நான் உறங்க
தாய் மடியிங்கில்லை,-ஆனால்
தள்ளி நின்று ரசிபதற்க்கு
தாராள உறவு பல,,!
பாசத்தை தேடி சென்று,
வேசத்தில் வெந்து போனேன்
வேண்டாம் இல் வாழ்வு
போதும் இவ் வாழ்வு
இல்லை ஏன் நின்மதி -ஆமாம்
வேண்டும் என் வெண்மதி...!
இடத்திற்க்கேற்றால் போலே
இயங்க முடியவில்லையேன்?
இதயத்தில் வலியும் -என்
இமைகளில் துளியும்
இடைவெளி இன்றி சிந்தினேன்
இருந்தும் முடியவில்லை.
இரும்பு இல்லை இதயம் என்று
இறக்கமற்ற இவளுக்கு,
இறைவா ஏன் புரியவில்லை?
உன் படைப்பில் பிழையா?
என் பார்வையில் பிழையா?
படைத்த உன்னை குற்றம் சொல்லி
பலியை உன் மேல போட -நான்
படித்த பண்டிதன் இல்லை
உறவாய் அவள் இருந்து
உள்ளத்தை தான் பறித்து
உணர்வை சிதைத்து விட்டு
உண்மையை மறந்துபோக-என்
உயிரும் ஊசலாடுதின்று
தலையிடி காய்ச்சலும்
தாறுமாறாய் தாவியது,
தலை சாய்த்து நான் உறங்க
தாய் மடியிங்கில்லை,-ஆனால்
தள்ளி நின்று ரசிபதற்க்கு
தாராள உறவு பல,,!
பாசத்தை தேடி சென்று,
வேசத்தில் வெந்து போனேன்
வேண்டாம் இல் வாழ்வு
போதும் இவ் வாழ்வு
இல்லை ஏன் நின்மதி -ஆமாம்
வேண்டும் என் வெண்மதி...!
0 comments:
Post a Comment