Tuesday, March 3, 2015

உரைப்பாயா உறவே நீ,

அழகிய கன்னி ஒருத்தி!
இந்தநாள் நினைவினிலே
என் அடிமனக் கனவினிலே!
அடிக்கடி வந்து போனால்.


அவள் பெயர் சொல்கையிலே
மனதில் ஒரு புன்னகை - இன்று!
மயக்கும் அவள் விழிகளில்
மயங்கின என் மொழிகளும்!


மயக்கிய விழிகள் யார் என்று
நான் மதி மயங்கி நிற்கையில்
என் மனையாள வரும்
மாங்குயில் நீ தான் என்று
மறைமுகமாய் சொன்னாயடி,


நிலவோடு தனியாக-நானும்
நீ இன்றி இருக்கையிலே
நின் நினைவுகள் நித்தமும்
என்னோடு நிரந்தரமாய் நிற்குதடி.


கத்தும் கடலலையும்
கை கட்டி நின்றிடும் டி
கடல்கரை தனிலே நீயும்
கால் நனைக்க வந்திடவே,


சொட்டுத்தேன் வடியும் நின்
செக்க செவ்விதல் திறந்து
பட்டுப்போன என் மனதில்
பால் சுரக்கும் வண்ணம்


அறியா பாலகன் எனக்கு
நீ எட்டு உரைப்பாயோ அழகி
நம் காதல் கதையதன்
கருப்பொருள் என்னவென்று

0 comments:

Post a Comment