Wednesday, January 14, 2015

வே(மீ)ண்டும் உதயம்

நம் வங்கக் கடல் தமிழன்
எங்கு குடி இருப்பினும்
சங்கத் தமிழ் சிறப்பை
மறந்து தான் வாழ்வானோ?


பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின் வாழ்வில்
வெற்றிகள் குவியட்டும்..!


மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது


வெல்லம் அரிசி ஒன்றாய் சேர்ந்து
சொல்லும் செய்தி ஒன்றுதான்!
கள்ளம் இல்லா உள்ளமிருந்தால்
எல்லா நாளும் பொங்கல்தான்!
 


புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்-பொங்குக
எங்கும் மகிழ்ச்சிப் பொங்கல்..!
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


0 comments:

Post a Comment