Friday, January 2, 2015

மடிந்தாலும் மடி வேண்டும்!

உதயமான சூரியனை கண்டு
உருமாறிய என் விழிகளை கொண்டு
உயிராகிய உன்னை தேடுகின்றேன்!
உடலில் நிறைந்தவளே!
உயிரில் கரைந்தவளே
உள்ளமெல்லாம் உன் நினைவே!
உருத்தெரியா என் கனவே!
உச்சந்தலையில் உள்ள சூடும்
உள்ளங்காலில் ஏறிய குளிரும்
உத்தமியே உன்னைத்தான்
உருவகித்து நிற்கின்றது.
உன்னிடத்தில் கொண்ட பாசம்
உருபெற்று எழும் வேளை
உரு மற்றம் பெற்றாவது
உன்னையே வந்தடைவேன்
உன்னோடு ஒரு நாள்
உனக்கென ஒரு நாள்
உன்னோடு வாழ்ந்திட்டால்
மறுநாளே மண்ணோடு
மடியும் நிலை ஆனாலும்
மானே உன் மடியிலே-என்
மறுயென்மம் வேண்டுமடி!

0 comments:

Post a Comment