Saturday, June 20, 2015

கைக்கிளை காதல்


அன்னப் பறவையைக்
கண்டாலும் கூட
அணைத்துக் கொஞ்சுகிற
ஆளில்லை நான்...
இப்போதெல்லாம் சின்னப்
பறவைகளோடும் -நிதம்
சிரித்துப் பேசுகிறேன்..!

அம்பு எய்திய மனம் -விம்மி
விம்மி வீழ்ந்தபின்னும்
வம்பு செய்த மனம்
கொண்ட என் ஆருயிரே,

எதை நீ தந்த போதும்..,
ஏற்று கொள்ளும் என்றும்
எந்தன் உள்ளம்..,

கைக்கிளை காதல்
எல்லாம் காமம்
இல்லை பெண்ணே...!
பெருமையல்லா உறவை
இழிவான காதல் என்று
இலக்கணமும் கூறவில்லை!

சதிராடும் இளமைக்கு
வடிகாலாய் இருக்கின்ற
காதல் உன்மனதில்
தோன்றா நிலைகண்டு
வேதனையில் துடிக்கின்றேன்;

வேரோடு வீழ்ந்திட்ட
மரம்போலத் தவிக்கின்றேன்
ஊரார் தூற்றுகிறார் -உன்
பின்னால் சுற்றுகையில்
ஆறாத புண்ணாக
ஆனதடி என்மனது!

இருள் சூழ்ந்த இரவினில்..,
என் இதயமோ தூரத்தில்..,
இமை மூடும் பொழுதினில்..,
என் கண்களோ நீரினில்

0 comments:

Post a Comment