Tuesday, April 21, 2015

ஆசையில் அவசரம்.


தடையேதும் வந்திடினும்
திசைமாறி போவோம் என்று
திருட்டு முழி பார்வைகளோடு
இருப்பதேனடா????


தத்தி தவழ்கையில் நீயும்
தாயிடம் பிச்சு தின்றதை
மறக்கலாமோ மானிடா?


தங்கதொட்டிலில் அன்றும்
தாவணிக் கட்டிலில் இன்றும்
தடுமாறும் உள்ளங்கள் பல


தடம்மாறி போனவர்களும்-வரை
படம் கொண்டு கடப்பதுண்டு
வையக வாழ்வினை!


படமே இல்லை உன்னிடம்-பின்
பாய நினைப்பது ஏனடா?
மூன்று முடிச்சிட நீயும்
முந்துவது ஏனடா? -முட்டாள்
ஆசையை அடக்கிகொள்
அவனியில் உண்டு ஆயிரம் ஆயிரம்.


அன்னையின் அன்பிலே
அப்பாவின் பண்பிலே
அக்காளில் அரவணைப்பிலே
அண்ணனின் அடக்கத்திலே
தம்பி,தங்கையின் தயவிலே


அனைத்தும் கண்டுகொள்
ஆண்டவன் அளித்திடுவான்
அளவான அழகான
ஆறடிப்பெண் சிலையை..!

0 comments:

Post a Comment